13/04/2024
எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥰🥰🥰
எம்மிடம் உள்நாட்டு, வெளிநாட்டு திருமண வரன்களை பெற்றுக்கொள்ளலாம்.
076 415 6365
எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥰🥰🥰
வாழ்க்கை தத்துவம்......
அன்பு குழந்தையே...
உன் வாழ்க்கையில் நான் இருக்கிறேன் என்று மறந்துவிட்டாயா உன்னை எப்படி நான் வீழச் செய்வேன். இப்படி நீ நினைக் கும் போது எப்படி உன்னால் என்னை உணர முடியும் உன் இதயத்தில் நான் வாழ்கிறேன் என்று.
கஷ்டம் யாருக்கு தான் இல்லை, உனக்கு, உன்னை சுற்றி உள்ளவர்களுக்கு ஏன் உன் சாய்தேவாக்கும் உண்டு.கஷ்டத்தை மட்டுமே யோசித்து கொண்டு இருந்தால் உனக்கு எப்படி முன்னேற தோன்றும். நான் இருக்கிறேன்.
உன்னைஎன்றும் திசைமாற விடமாட்டேன் நீ என் உயிராய் இருக்கிறாய் எப்போ தும் என் பிள்ளையாய் நீ இருப்பாய். உன் வாழ்க்கையில் முன்னேற நிச்சயம் வழி காட்டுவேன். அதில் நீ நிச்சயமாக பயணிக்க போகிறாய் வெற்றியும் அடைய போகிறாய்.
உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள். புல் மூங்கில் கதை உனக்கு தெரியுமா. நான் சொல்கிறேன் கேள்.
புல் நீ மண்ணில் நட்டு வைத்ததும் வளர்ந்து விடும். ஆனால் அது சிறிதாய் தான் இருக்கும் அதற்கு மேல் அது வளரும் தன்மை உடையது அல்ல. இதுவே மூங்கிலை நீ எடுத்து கொண்டால் அது வைத்து ஐந்து ஆறு வருடம் வளராம ல் அப்படியே இருக்கும் பார்ப்பதற்கு.
ஆனால் அது வேரை அது பக்குவப்படுத்தி, அது பலமாக மண்ணில் பிடிப்பான வேரை க் கொண்டு இருக்கும். அதன் பிறகுதான் அது வளர ஆரம்பிக்கும் ஆனால் அது வளர ஆரம்பித்து விட்டால் அதன் உயரம் பத்து மடங்கு வளர்ச்சியை கொடுக்கும்
அதன் வளர்ச்சியை எப்படியாயினும் தடுத்து நிறுத்த முடியாது அது மூங்கிலின் வெற்றி. புல் வேகமாக வளர்ந்தாலும் அதனுடைய வளர்ச்சி சிறியது தான், ஆனால் மெதுவா க வளர்ந்தாலும் மூங்கிலின் வளர்ச்சி பெரியது.
உனக்கு வெற்றி கிடைக்க நேரம் ஆகின்ற தே என்று வருந்தாதே என் பிள்ளை நீ வளர்ந்து உயரமாக நிக்க போகின்ற மூங்கில் மரம். அதனால் பயப்படாதே நிச்சயம் நீ வெற்றி அடைவாய். உன்னுள் எழும் கோணலான சிந்தனைகளை நான் மாற்றுவேன்.
அது உன் மனதை ரணப்படுத்தி கொண்டு இருப்பதை எப்படி என்னால் உணராமல் இருக்க முடியும். நிச்சயம் நீ நிம்மதி அடை வாய். நீ ஜெயமாக நன்றாக மனநிம்மதி யுடன் சந்தோஷமாக உன்னை சேர்ந்தவர் களு டன் வசந்தமாய் வாழ்வாய்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
இலக்கு..!! -
ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு தர்மன், தன் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.
தோட்டத்திற்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த ஒரு கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த கோழிகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்ததென்று நினைத்து தோட்டத்திற்குள் தலைதெறிக்க ஓடின. உடனே தர்மன், தன் மகனிடம், நீ விரைந்து சென்று அந்தக் கோழிகளைப் பிடித்து வரும்படி கூறினார். அவனும் அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு கோழிகளின் பின்னாலேயே ஓடினான்.
அடைபட்டுக் கிடந்த கோழிகள் தோட்டத்தில் நான்கு திசைகளிலும் மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தன. கோழிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில்6 இருந்ததால் தர்மனின் மகனுக்கு எந்தக் கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய் வந்தான். தன் தந்தையிடம் என்னால் எந்த கோழியையும் பிடிக்க முடியவில்லை என்று சோகமாகச் சொன்னான்.
தர்மன் சிரித்துக் கொண்டே, மகனே! அதோ அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் துரத்திச் சென்று முதலில் பிடித்து வா. பிறகு மற்ற கோழிகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். அவனும் தன் தந்தைக் கூறியது போலவே, அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் குறிவைத்து துரத்திச் சென்றான். சில நிமிடங்களிலேயே அந்த சிவப்பு நிறக் கோழி அங்கும் இங்கும் ஓடி ஓடி களைப்படைந்து ஒரு இடத்தில் நின்றது. உடனே அவன் அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து கொண்டான்.
சிவப்பு நிறக் கோழியை பிடித்து வந்த தன் மகனைப் பார்த்து, தர்மன் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கே விடை கிடைத்து விட்டது என்றார். அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா, நான் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கும் இந்த கோழியைப் பிடித்து வந்ததற்கும் என்ன சம்மந்தம் என்று சற்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டான்.
உடனே தர்மன், நீ ஒரு சிவப்புநிறக் கோழியை மட்டும் குறி வைத்து துரத்திச் சென்றதால் நீ மிக எளிதாக அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து வந்து விட்டாய் அல்லவா, அதேபோல் தான் ஏதேனும் ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டு அந்த இலக்கை அடைவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.
#தத்துவம் :
எளிதில் வெற்றி பெற, ஒரு இலக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்..!!
🥀🌷🥀🌷
அன்பு குழந்தையே...
நமது மனம் இறைவன் மீது முழுமையாகப் படிந்து விட்டால், தேகத்தை பற்றிய கவலை நமக்கிருக்காது.
மன உளைச்சல், அலைச்சல், துக்கம், கோபம் போன்றவை நம்மை அணுகாது புகழ்ச்சிகளும், அவமானங்க ளும் நம்மை பாதிக்காது.
தேகத்தால் விளையும் துன்பங்கள், சம்சார வேதனைகள் முதலியன நமக்குத் துன்பமாக தெரியாது. நான், எனது என்ற அகங்கார எண்ணம் நம்மை நெருங்காது.
மாயை நம்மை விட்டு விலகிவிடும். என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து என் மீதே உங்கள் கவனம் திரும்பட்டும்.
என் மீது உங்கள் மனதை லயமாக்குங்கள். எந்த ஒரு பெருமுயற்சியும் இல்லாமலே யே உங்களைப் பிறவிப் பெருங் கடலை தாண்ட வைப்பேன்.
என் கதைகளை மேம்போக்காக கேட்டாலு ம் பாவங்கள் நீங்கி ஜனன மரண சுழற்சி யிலி ருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.
உடனே தொடங்குங்கள், என் உதவி உங்களு க்கு என்றும் உண்டு'.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
அன்பு குழந்தையே...
ஏன் இந்த வாழ்க்கையில் உனக்கு இத்தனை குழப்பம், குழப்பம் வருவது இயல்பு தான் இல் லை என்று சொல்ல வில்லை ஆனால் எதற்கு எடுத்தாலும் குழப்பம் என்றால் வாழ்க்கையை எப்போது வாழ போகிறாய்.
நிச்சயமாக உனக்கு மாறுதல்கள் நடக்கப் போ கிறது உன் புதிய வாழ்க்கைக்கு வண் ணமயமாய் ஆகபோகிறது உன் வாழ்க்கை கவலைக் கொள்ளாதே. உன்னுடைய வாழ்க்கையில் நிகழும் அனைத் தும் நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
அதை யோசித்து உன் மனதில் எழும் நிம்மதி யற்ற சிந்தனைகளை கொஞ்சம் கவனி. அவற்றால் நீ இழப்பது உன் மனதி ன் நிம்மதி தான். உன் மனதை பாதிக்கும் அளவுக்கு உன் மனதை ஏன் இப்படி எதிர்ப்புசக்தி இல்லாத இருக்கிறாய்.
ஏதாவது உன் மனதை பாதிக்கும் வகையி ல் நடந்து விட்டால் நீ வலு இழந்து காணப் படுகிறாய். உன்மனதில் நான் வசிக்கிறே ன் என்று உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
காயப்படுவது நீ மட்டும் இல்லை நானும் தான் உன்னை காயப்படும்படி நான் தெரி ந்தும் உன க்கு செய்வேனா, நீ அவற்றை தாங்கி கொள்ள மனதில் தெம்பு இல்லை என்றால் உன்னை அப்படியே விட்டுவிடுவேனா.
அந்த அவநம்பிக்கையை எண்ணத்தை மனதில் இருந்து தூக்கி எரி. குழந்தைகளு க்கு பலம் இல்லை என்றால் தாய் தான் தன் பிள்ளையை எப்படி எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க எல்லா மருந்துகளை யும் உனக்கு கொடுப்பார்களோ அதை போலவே தான் நானும்.
உன் மனதை ரணப்படும்படி பேசியவரின் காயத்தில் இருந்து உன்னை நான் காப்பேன் ஆனால் உனக்கு உன்னுள் அதை தாங்கி கடந்து போகும் அளவிற்கு பக்குவம் இல்லை சில விஷயங்களை புரியவே நான் எவ்வாறு உனக்கு நிகழ்த்துகிறேன்.
உன் மனம் என்பது கோட்டை போல் கம்பீ ரமாக இருக்கவே நான் உனக்கு இந்த பாடங்களை புகட்டினேன், உன் மனதில் அதற்கான அஸ்தி வாரம் போடுகிறேன். ஒரு நாள் கோட்டை போல ராஜ கம்பீரமாய் எழுந்து உன்னை அவமானம் படுத்தியவர் கள் முன்னிலையில் நீ நிற்பாய் இது என் சத்திய வாக்கு.
பயப்படாதே உன் வேண்டுதல்களுக்கு நான் செவிச் சாய்க்கவில்லை என்று கருதாதே. ஒரு தாய் பறவை தன் பிள்ளை பறவையை பறக்க வைக்க எல்லா முயற்சியும் செய்யும் அப்படியும் பறக்கவில்லை என்றால் அது உயரத்தை கண்டு பறவை அஞ்சுகிறது என்று தாய் பறவைக்கு எப்படி புரியாமல் இருக்கும்.
அது எப்படி வாழ முடியும் என்று யோசிக்கும் தாய் பறவை யார் துணையின்றி என் பிள்ளை வாழ வேண்டும் என்று கருதி, தன் பிள்ளை பறவையை தனியாக எங்கோ ஒர் இடத்தில் தனியாக விட்டு விடும்.அந்த தாய் பறவைக்கு தெரியாது தன் பிள்ளை பயப்படும் என்று,
அதையும் தாண்டி அப்படி செய்கிறது என் றால் அதனை பக்குவப்படுத்தி வாழ்க்கை யில் வாழ வைப்பதற்கே. அதை போலவே உன்னை யும் நான் பயிற்றுவிக்கிறேன் இது நான் என்ற உனக்கு தரும் பயிற்சி.
இதில் வெற்றி என்ற சொல்லை மட்டும் தான் நீ எதிர்நோக்க போகிறாய் உன் எதிர்கால வாழ்க்கையில். அதனால் சில சோதனைகள் உன்னை மூழ்க செய்யும் அளவுக்கு இருக்கும், ஆனால் நீ மூழ்க மாட்டாய்.
உன் கையை எந்த இடத்தில் இருந்தாலும், நான் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். என் பரிபூரண அருளும் அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் உண்டு. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் என் இதயத்தின் கருவறையில் சுமந்து காத்து அரவணைத்து வளர்ப்பேன்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
#ஐயப்பா_சரணம்
அன்பு குழந்தையே...
உன் கர்ம வினைகளால் உனக்கு ஏற்படும் சுகத்தையும், துக்கத்தை யும் நீ அனுபவித்தே தீர வேண்டும்.
ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் சுலபமாக அதை நீ எதிர் கொள்ளலாம்.
முதலில் நீ பொறாமையை வென்றிடு. நீ வெறு க்கும் மனிதர்கள் வளம் பெற்றால், உனக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டு விட்டது?
கேடு செய்த அவர்களுக்கு நல்லது நடக்கிறது என்று பொறாமை கொள்கிறாய் அவர்களுக்கு அவர்களுடைய கர்ம பலன்களால் கிட்டியது.
அவர்களை போன்று பதவி, அதிகாரம், பணம், செல்வாக்கு உனக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதால், உன்னைத் தேடி வரும், நல்லதை நீ தவற விடுகிறாய்.
ஒன்றை புரிந்து கொள் குழந்தாய், எல்லோரும் ஓரே மாதிரிவாழ முடியாது. அவரவருடைய கர்மவினைகளின் படி அது மாறு படும். உனக் கான நல்லதை யாராலும் தடுக்க முடியாது.
உலகில் நிறைய பேர் உன்னை விட மிகவும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பதை வைத்து நீ மகிழ். உனக்கும் நலம் கிட்டும்.
நாமும் பாக்கியசாலிகள், நலம் பெறுவோம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒன்றை இழந்தால் அதை விடச் சிறந்த ஒன்று உன்னிடம் வந்து சேரும். நீ இழந்தது உனக்கு நல்லதல்ல என்பதை காலம் நிச்சயம் ஒருநாள் உனக்கு சுட்டி காட்டும்.
நம்பிக்கையோடு காத்திரு, நல்லதே நடக்கும்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
*சும்மா*== படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.
*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
*"சும்மா"* ======
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)
*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*
*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)
*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)
*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)
*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*
*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)
*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)
*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)
*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)
*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)
*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)
*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)
*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)
*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"*
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)
*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.
*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*
இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😝😝😂😂😂
#அன்பு #குழந்தையே...
எல்லா இடங்களிலும் துரதிருஷ்டம் உன்னை துரத்துகிறது. என்று நீ எண்ணுகிறாய். அது முற்றிலும் தவறான எண்ணம்.
உன்னை விதியும், ஆசைகளும், இக்கட்டான சூழ்நிலையில் எடுத்த முடிவுகள் தான் இந்த நிலைக்கு இழுத்து சென்று விட்டன.
கவலை வேண்டாம் எல்லாம் முடிவுறும்.
நம்பிக்கையோடு செயல்படு.
எப்போது என்ன நடக்குமோ என்கிற பயம் உன்னை சூழ்ந்து இருக்கும் வரை உன்னால் நிதானமாக யோசித்து செயல்பட முடியாது.
முதலில் மனதை ஒரு நிலை படுத்து. மனதில் அமைதி இல்லாமல் நீ எதைச் செய்தாலும் அது சிறப்படையாது.
எல்லாரும் உன் உள்ளத்தை காயப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்களே என்று வருந்தாதே. உன் கண்ணீரை வீண் ஆக்காதே.
உன் தேவை, வலிமை புரியாதவர்களுக்காக நீ வருத்தபடுவதால், உன் மதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை.
நீ அவர்களை பற்றியே யோசித்து மனம் சோர்வு அடைந்து, உன் லட்சியத்தை நோக்கி முன்னேறி செல்வதில் சுணக்கம் ஆகிறது.
அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நீ சற்று விலகி இருப்பதே உனக்கு நல்லது.
அவர்களுக்கு தீமை செய் என்று கூறவில்லை. அவர்களே உன் தேவை அறிந்து உன்னைத் தேடி வரும் பட்சத்தில் நீ உதவி செய்.
மன அமைதி இழந்து நிற்கும் உன் வாழ்க்கை கூடிய விரைவில் மாறும்.
நீ எதிர்பார்த்த நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். தைரியமாக நம்பிக்கையோடு செயல்படு.
நல்லதே நடக்கும். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை .
#ஓம் #ஸ்ரீ #சாய் #ராம்
#சரணம்_ஐயப்பா...👍🙏🙆
🤍அனுபவம் தத்துவம்.🤍
நமக்குன்னு இருக்கும்
சில கடமைகளை எந்த குறையும் இல்லாமல் செய்தாலே போதும்,
முதுமையே வந்தாலும் நிம்மதியாக போகும் இந்த வாழ்க்கை..
மிக வேகமாய்
யார் ஒருவருக்கும்
முக்கியத்துவம்
கொடுத்து விடாதீர்கள்.
பிறகு பின்வாங்குவது
வெகு சிரமம்
அவர்களை
பிடிக்காமல் போனாலும்...!!
திருக்குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தான் முடிந்தாலும் பீழை தரும்
பிழைஎன கடிந்ததை
(கண்டனத்தை)
கடிந்ததை ஏற்காததார் பிழையை செய்தார்க்கு
செய்தபிழைதான்
முடிந்தாலும் பிழைக்கான பீழையை தரும்
பிழைமுடிந்தாலும் பீழை முடியாது
அரியசொல்
பிழை=தவறு
பீழை=தவறுக்கான விளைவு
உன் வலியை உணர்ந்தால்..
நீ உயிரோடு இருக்கிறாய்
என்று அர்த்தம்..
பிறர் வலியை உணர்ந்தால்..
நீ மனிதனாக இருக்கிறாய்
என்று அர்த்தம்..!
1. தவறிப் போனதைப் பற்றி
கவலைப்படாதீர்கள், *அது திரும்ப வராது.*
2. பிறருடன் உங்களை
ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். *அது பயனளிக்காது.*
3. எல்லா மனிதர்களையும்
திருப்தி படுத்த நினைக்காதீர்கள். *அது நடக்காது.* 🙏
துயரம் கூட நமக்கு வருத்தம் மட்டும்தான் தரும். ஆனால் மிக நெருக்கமான நபர் செய்கிற துரோகத்தின் நிழலாய் பின்தொடர்வது வருத்தமல்ல வாழ்வின் மீதான அவ நம்பிக்கை...🖤
அதைச் சுமந்து கொண்டே இருப்பவர்கள் தன்னைத் தீண்ட வரும் ஒவ்வொரு அன்பையும் உடைத்துப் போட்டு வெறுமையோடலைகிறார்கள்.....
எண்ணம் அழிந்தபின் எஞ்சியென் உளத்துள் இலங்கும் உணர்வு நீ என்றுரைப்பார் திண்ணம் அது திருத்தில்லையில் வெளியாய்த்
தெரியும் பரமெனச் செப்பிடுவார்
வண்ணம் பொலியுமிவ் வானமும் புவியும் வந்த விதம் நடம் காட்டுமென்பார் கண்ணா எனக்கு நின் காலிணை எழிலைக் கண்டு களித்தலே போதுமய்யே!
பொய் கூறி தக்க வைக்கப்படும் எது ஒன்றும்,
மகிழ்ச்சியை விட மன அழுத்தத்தையே அதிகம் தரும்!!
வாழ்க்கை போரில்,
எத்தனையோ,
சொல் அம்புகள்,
உன்னை நோக்கி
வரும்போதெல்லாம்,
அதை தடுத்து நிறுத்தும்,
கேடயமாய் உன்னிடம்,
இருக்க வேண்டும்,
உன் அமைதி மட்டுமே...
#அனைவரையும்,
இங்கு நம்பு,
ஆனால் அனைத்து,
சூழ்நிலைகளையும்,
நம்பாதே,
இங்கு வீரத்தால்,
வீழ்த்தபட்டவர்களை விட,
சூழ்ச்சியால்,
ஏமாற்றபட்டவர்கள் தான்,
அதிகம் மக்களே..👍
🌷🌷🌷
அன்பு குழந்தையே...
வாழ்க்கையில் உனக்கானது எல்லாம் கடவுள் தரும் வரங்கள். அவற்றுள் உனக்கான சில சிரிப்பை ஏற்ப்படுத்தும் சில உனக்கு கண்ணீ ரை ஏற்ப்படுத்தும்.
ஆனால் எல்லாவற்றுக்கும் உன் ஆத்மா வுக் கான நம்மை மட்டுமே உன்னை படை த்தும் காக்கும் கடவுள் உனக்கு செய்வார்.
உன் வாழ்வில் உனக்கு என்ன சோதனை தடங்கல் வந்தாலும் அவற்றை என் அருளால் தக்ர்த்து எறிவாய். உன்னுள் நீ வெற்றி பெற எல்லா உத்வேகத்தையும் அருளுவேன்.
இயற்க்கையை யாரலும் தடுக்க முடியாது அதை போலுவே தான் உனக்கான வெற்றி யையும் உன் முன்னேற்றத்தையும் யாரா லும் தடுக்க முடியாது.
வாழ்க்கையில் நீண்ட பயணமாய் உன் வானத்தின் பரப்பளவில் நீ அவதிப்பட்டு கடந்த தடுப்புசுவர்கள் எல்லாம் மறைந்து உனக்கான இனிய உலகம் துவங்க உள்ளது.
எல்லாம் சீக்கிரமாய் அமையும் உன் வாழ்க் கையில் நீ எதிர்பார்த்த சந்தோஷ ங்களுடன் நிம்மதிகளுடனும் உன்னை வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
என்றும் அரவணைப்பிலே வாழ்வாய். உன் சாய் அப்பாவின் வார்த்தை உனக்கா ன இரத்த ஓட்டத்தை போல் இனிஎன் நாவி ல் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
இறைவா...
இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்,
உன் நினைவொளியில்
வாழ்வேன்.....🙏🙏🙆
புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு அழகோவியமாக காட்சியளிக்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 108 அடி உயரமான இராஜ கோபுரம்.
அன்பு குழந்தையே...
எது உன்னை துன்புறுத்தினாலும் கவலை
படாமல் இரு. எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு. எதுவும் என்னை மீறி நடக்காது என்பதை தீர்க்கமாக நம்பு.
அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. சகித்துக் கொள்ள முயற்சி செய். எனது தாமரை பாதங்களில் சமர்பித்து விடு எதுவும் நிரந்தரம் இல்லை.
எல்லாம் ஒரு நாள் மாறும். என்னை நம்பி வந்த உன்னை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை தாங்கி நிற்ப்பேன்.
ஆரம்பத்தில் என்னை நிராகரித்து உன் மனம் போன போக்கில் சென்றாய் கடமை யே என்று என்னை பூஜித்து வந்தாய்
ஆனால் காலங்கள் பல கடந்து பல முறை அற்புதங்களை நிகழ்த்தி என்னை நீ புரிந்து கொள்ள வைத்தேன்.
நினைத்து பார் எப்படி எப்படியோ வாழ்க் கையை நகர்த்தி கொண்டு வந்தாய் ஓடிக் கொண்டே இருந்தாய்.கீழே விழுந்த உன்னை எனது கரம்கொண்டு இழுத்து வந்தேன்.
நீ எத்தனை முறை விழுந்தாலும் தோற்றா தாக அர்த்தம் இல்லை. ஜெயித்து கொண் டு வந்திருக்கிறாய். இதை நினைவில் நிறுத்திக் கொள்.
பல பேர் வாழ்கையை வாழ்வதற்கு தைரி யம் இல்லாமல் இன்றும் பல துயரங்க ளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் நீயோ அனைத்தையும் கடந்து நானே கதி என்று,
என்னை நம்பி என்னிடத்தில் பொறுப்புக் க ளை ஒப்படைத்து சதாசர்வகாலம் என்னை விடாமல் பூஜித்து கொண்டு இருக்கிறாய்.
உன்னை வழிநடத்தும் ஆசான் நான் உன் னை வாழ்கையில் வியக்கும் வண்ணம் உயர்த்து வதே எனது கடமை.நான் இருக் கிறேன் நம்பிக்கை இழந்து விடாதே.
அனைத்தும் என்னையே சேரும். எதுவாக இருந்தாலும் என்னிடத்தில் சொல்லி விட்டு செயல்படு. எனது பரிபூரண ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உன்டு.
உனது கர்மபலன்களை விலக்கி உன்னை வாழவைப்பது என் பொறுப்பு. பொருமை யாக இரு. அப்பா நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
நல்லவன் வாழ்வதற்க்கும்
கெட்டவன் வீழ்வதற்க்கும்
சில காலம் ஆகும்...
ஏன் என்றால் இங்கு எல்லமே
சில காலம்...
வாழும் வரை யாருக்கும் துன்பம்
அளிக்காமல் வாழ்...
இறைவன் உன்னுடன் வாழ...
ஒம் சுவாமியே சரணம்
ஐயப்பா...🙏🙏🙆
அழகு மிளிரும் பொன்னாலை வரதராஜப்பெருமாளின் தேவஸ்தானம் 🙏🙏🙏
அன்பு குழந்தையே...
நீ எதைச் செய்தாலும் எந்த காரியத்தை முடித்தாலும் அனைத்தும் நான் என்று கூறி கொண்டு இருக்கிறாய் அந்த எண்ணத்தை உடனடியாக உன் மனதில் இருந்து அகற்றி விடு..
நான்... நான் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகி றது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பு.
இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால் சுகமாக தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும் போதும் இந்த நான் உள்ளது.
உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தி யாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவி ற்குள் சென்று ஒடி ஒளிந்து விடும்.
நான்தான் என்ற அகந்தையை அகற்றுங்கள் எதற்காகவும் எப்போதும் கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் கலங்காதே நான் உன்னை கைவிட மாட்டேன்..
ஓம் ஶ்ரீ சாய் ராம்....
#சாமி_சரணம்_ஐயப்பா
🌹அன்பு குழந்தையே...
வாழ்க்கையில் ஜெயித்திட முயற்சிகளும் உழைப்புகளும் மிக அவசியம். நானும் உழைக்கின்றேன் முயற்சிக்கிறேன். பிறகு ஏன் எனக்கு வெற்றி என்னும் கீரிடத்தை ஏன் சூட முடியவில்லை என்று கேட்கிறாய்.
உன் உழைப்பும் முயற்சியும் உண்மை தான் ஆனால் வெற்றி என்ற பூக்களை பறிக்க சில முட்களிடம் நீ காயப்பட வேண்டும், காயப்பட வேண்டும் என்பதை விட, வாழ்வின் இன்னொரு பக்கம் இருக்கும் தோல்வி என்ற மிக பெரிய பாடத்தை கற்க வேண்டும் என்றே.
உன் வெற்றிக்கு நடுவில் உனக்கு ஏன் இந்த சறுக்கல் தோன்றுகிறது. மனவலிமையை சோதிப்பதற்கே அது நடத்தப்படுகிறது.
மனவலிமையுடன் நீ போராடி அதற்கான துணிச்சலை கொண்டு அவற்றுக்கு வரும் தடையை நீ எதிர்த்து, பொறுமையும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அகிலமே உனக்கு கிடைத்த வெற்றி என்ற உணர்வை நீ அடைவாய்.
உனக்கு வரும் கஷ்டங்களால் அந்த நேரத்தில் மனச்சுமை அதிகமாக தான் தெரியும், ஆனால் நீ மனந்தளராது நின்றால் எல்லாம் வெற்றியே.
உனக்கு கஷ்டத்தையும் பிரச்சினைகளையும் கொடுக்கும், நீ நடுவில் நிற்கதியாய் நிற்பதை போன்று உணர்கிறாயா?
நடுவில் எந்த துணை இல்லாமல் நிற்கதி யாய் நிற்கிறேன் என்ற எண்ணத்தை மறந்து, ஒரு நிமிடம் கண்மூடி,மனஅமைதி யுடன் எதையும் யோசிக்காமல் சாந்தமாக மாறி அமைதியான சூழலை உனக்குள் கொண்டு வா,
அந்த நிமிடம் நீ நிற்கின்றதே என் பிடியில் தான், உன்னை நான் என்ற உன் சாய் தேவா தாங்குகிறேன் என்பதை மனமார உணர்வாய். எதற்கும் அஞ்சாதே எதையும் துணிந்து எதிர்த்து நில் உனக்கான என் துணை என்றும் உண்டு.
உன்னை நிச்சயம் நல்வழிப் படுத்துவேன்.
உனக்கான வழிகள் எல்லாம் வெற்றியாய் இருக்கும். அதற்கு நான் பொறுப்பு.
🌹ஓம் ஸ்ரீ சாய் ராம்...
என் ஐயனே
உனை நம்பியே ஓடுகிறது
என் வாழ்க்கை!
வாழ்வில் விழுந்தாலும்,
கை கொடுத்து ஒருநாள் கரைசேர்த்து
விடுவாய் என்ற நம்பிக்கையில்!!
99, Laxapana Road, Thonikkal
Vavuniya
43000
Be the first to know and let us send you an email when நல்லூரான் திருமண சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to நல்லூரான் திருமண சேவை:
Nalluraan Matrimony has been helping people from the Sri Lankan Tamil community around the world find their perfect life partner.
Nalluraan Matrimony is an exclusive matrimony portal for Sri Lankan Tamils from around the world to find a life partner. Nalluraan Matrimony bridges the distance between you and your life partner no matter where he or she is. Meet singles from all walks of life and discover the one who will be with you forever. Now you can simply sit back at home or even search for your life partner while you are at work. Enjoy a life full of joy in the special world of marital bliss.
Over the years, we have helped Tamil speaking peoples find matches from across different communities.
We have matches from all religions including HINDU, RC and NON RC.
Not just that, we have profiles from across the world with top searches from Sri Lanka , United States of America, United Kingdom, United Arab Emirates, Australia, Singapore, Canada, Malaysia, Kuwait and Saudi Arabia.
1) No.1 & most trusted matrimony service for Sri Lankan Tamils
2) Our largest number of profiles increases your chances of meeting the right person
3) Many Sri Lankan Tamils have found their life partner here
4) Trusted service
#Find Your Equal on the No.1 & most trusted matrimony service for Sri Lankan Tamils
Contact us - 076 415 6365
Email – [email protected]